மீண்டும் வந்திடுமோ அந்நாள்..//
அந்நாள் மீண்டும் வந்திடுமோ ஏங்குகிறேன்..//
ஊருசனம் கூடியிருக்க
மாப்பிள்ளையாக இருந்தேன்..//
யாருன்னு தெரியாதவள்
மனைவியாக வரத்துடித்தாள்..//
மனம் முழுவதும்
பூரிப்பில் கிடந்தேன்..//
கனவுகளுடன் கற்பனைகளுடன்
அந்நாள் போகுதே..//
பெரியோர் பூதங்களை
சாட்சியாக கொண்டு..//
கட்டி விட்டேன்
மஞ்சள் கயிறு..// 7
உறவுகள் கூடி
கொண்டாடியது அன்று..//
ப. பரமகுரு பச்சையப்பன்