சுவைப்பேன் எந்நாளும்

தென்றலின் கரம் வந்து
தென்னைக்கீற்றினை இசைப்பதினால்
மௌன குயில் விழித்து
தன்னை மறந்து கூவி துணை அழைத்து
சேர்ந்து இசைத்ததிலே மண்ணில் சொர்க்கம் நிலைத்துவே
அன்று மௌனக்குயில் நீயோ?
இன்று மயக்கும் மயில் நீயோ?
என்றும் காதல் உன் மடியில்
வென்று சுவைப்பேன் எந்நாளும்..

எழுதியவர் : மணிகண்டன் (9-May-23, 3:00 pm)
சேர்த்தது : மணிகண்டன்
பார்வை : 98

மேலே