என்னை மட்டும் ஏன்

கொழும்பில் படரும் திராட்சை
பழ கொடி போல் உன் கேசம்
அதை பார்த்த உடன் என் நாவும்
காதல் மொழி பேசும்
சிப்பிக்குள் இருக்கும் கருமுத்து
போல் உனது விழிகள்
கல்லாய் இருந்த என் நெஞ்சில்
காதலை செதுக்கிய உளிகள்
உன் தோழியர் மத்தியில் உன்
வீணை குரலை மீட்டுகிறாய்
என் காதலை தீதென கூறி
சிறையிலிட்டு போடுகிறாய்

எழுதியவர் : நிழல்தாசன் (24-May-23, 7:25 pm)
சேர்த்தது : நிழல்தாசன்
பார்வை : 131

மேலே