முதுமுனைவர் இறையன்பு அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு மடல் கவிஞர் இராஇரவி

முதுமுனைவர் இறையன்பு அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு மடல்!

கவிஞர் இரா.இரவி

*****

அலுவலக உதவியாளர் முதல் நீதியரசர்கள் வரை
அனைவருடனும் அன்புடன் பழகிடும் பண்பாளர்!

எளிமையின் சிகரம் ஏழ்மையின் தோழன்
எழுத்து சொல் செயல் வேறுபாடில்லாத எளியவர்!

திருக்குறளில் மனிதவள மேம்பாடு தலைப்பில்
திருக்குறளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்!

திருவள்ளுவரையும் சேக்‌ஸ்பியரையும் ஒப்பிட்டு
தன்னிகரில்லா முனைவர் பட்டம் பெற்றவர்!

கம்ப இராமாயணத்தில் சொல்லாட்சி என்று
கம்ப இராமாயணத்தை கரைத்துக் குடித்தவர்!

பல்வேறு பட்டங்கள் பெற்றிட்டப் போதும்
பண்பில் உயர்ந்த குன்றாக என்றும் நிற்பவர்!

தலைக்கனம் செருக்கு திமிர் என்றால் என்னவென்றே
தெரியாத இனிமையின் இமயம் இனியவர்!

ஏழை எளியவர்களின் துன்பம் உணர்ந்து
எளிதில் நீக்கிட உதவிகள் பல புரிபவர்!

நிலவொளி பள்ளி தொடங்கி வைத்து
நின்றுபோன கல்வியைத் தொடர வைத்தவர்!

முப்பத்திஐந்து ஆண்டுகள் அரசுப்பணியில்
முத்திரைப் பதித்து எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர்!

அப்துல்கலாமிற்கு அடுத்தபடியாக மாணவர்களை
ஆயிரக்கணக்கான கூட்டங்களில் சந்தித்தவர்!

நேர்மையான அரசு அலுவலராக வென்றவர்
நல்ல நெறியை பண்பை நாளும் போதிப்பவர்!

எழுத்து பேச்சு இரண்டு வெவ்வேறு துறையிலும்
எண்ணிலடங்காத சாதனைகள் நிகழ்த்துபவர்!

நூற்றி ஐம்பது நூல்களுக்கு மேல் வடித்தவர்
நூற்றாண்டு சாதனைகளை அறுபதிலேயே நிகழ்த்தியவர்!

நட்புக்கு இலக்கணமாக என்றும் வாழ்பவர்
நண்பர்களின் கண்ணீர் துடைக்கும் கரங்கள் படைத்தவர்!

ஓய்வு என்பது உங்களுக்கு அரசுப்பணிக்குத்தான்
ஓய்வு என்றும் இல்லை உங்களின் இலக்கியப்பணிக்கு!

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (4-Jul-23, 12:03 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 72

மேலே