புதுகைத் தென்றல் ஆசிரியர் புதுகை மு தருமராசன் முத்து விழா வாழ்த்து மடல் கவிஞர் இரா இரவி

புதுகைத் தென்றல் ஆசிரியர்
புதுகை மு. தருமராசன் முத்து விழா வாழ்த்து மடல்!
கவிஞர் இரா .இரவி !
*****

புதுகை என்ற புதுக்கோட்டையில் பிறந்தவர்
புதுகையை பெயரோடு இணைத்துக் கொண்டவர்

புதுகைத் தென்றல் மாத இதழ் தொடங்கி நடத்துபவர்
புதுக்கோட்டையின் பெருமைகளில் ஒன்றானவர்

இதழில் தலையங்கம் மூலம் நல்ல கருத்து விதைப்பவர்
இதழில் அறத்தையே என்றும் வலியுறுத்தி வருபவர்

ஆட்சியாளர்கள் நல்லது செய்தால் பாராட்டுவார்
ஆட்சியாளர்கள் அல்லது செய்தால் கண்டனம் செய்வார்

புதிய படைப்பாளிகளை இதழில் அறிமுகம் செய்வார்
படைப்பாளிகள் குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட உதவுவார்

தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களின் நெருங்கிய நண்பர்
தமிழ்த்தேனீயின் கட்டுரைகள் பிரசுரம் செய்து மகிழ்ந்தவர்

பல்வேறு நூல்கள் எழுதிய சிறந்த எழுத்தாளர்
பல நல்ல நூல்கள் வெளியிட்ட சிறந்த பதிப்பாளர்

வங்கியின் அதிகாரியாகப் பணியாற்றி சிறந்தவர்
வங்கியின் சங்கப்பணியிலும் அங்கம் வகித்தவர்

யாரிடமும் கோபம் கொள்ளாத இனிய பண்பாளர்
யாவருக்கும் உதவிகள் செய்திடும் மனிதநேயர்

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பெண் பின் நிற்பார்
ஓவ்வொரு வெற்றியிலும் பானுமதி அம்மா முன் நின்றார்

பொறியாளர் விசுவேசரய்யா போல நூற்றாண்டு கடந்து
புதுகையார் வாழ்ந்திட வாழ்த்தி மகிழ்கிறேன்.

எழுதியவர் : வாழ்க்கை (8-Jul-23, 12:46 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 18

மேலே