1980 களில் மேலக்கலங்கல் அம்மன் கோவில் திருவிழா

80'களில் மேலக்கலங்கல் அம்மன் கோவில் திருவிழா..

வில்லிசை
🏹🏹🏹🏹

8 ஆம் நாள் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வில்லுப்பாட்டுயெனும் வில்லிசை நிகழ்ச்சி நடைபெறும்..

வில்லிசை 80 களிலே 40 வயதுக்குள் உட் பட்டவர்களுக்கு பிடிக்காது இருப்பினும் 40 யை கடந்த பாட்டி தாத்தாக்களுக்கு அன்றுதன் ஒரே குஷியாக இருப்பார்கள் ..

அதிலும் நல்லதங்காள் கதையென்றால் ஊரில் மொத்த பெரியவர்களும் வில்லிசை நடக்கும் இடத்திக்கு சாக்கு,பாயுடன் அன்று இரவு ஆறு மணிக்கே இடம் பிடித்து காத்திருப்பார்கள் அவ்வளவு லவ்வு வில்லிசை மீது..

தென்தமிழக தெய்வங்களான சுடலை மாடன்,கருப்பசாமி கதை , நல்லதங்காள்,இசக்கி கதை ,அம்மன் கதை,சரித்திர கதைகளையும் வில்லிசையாக பாடுவார்கள்..

தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பட ஆமா வில்லினில் பட வந்தருள்வாய் கலை மகளே..

என்று பாட ஆரம்பித்த உடனே பெண்கள் கூட்டத்தில் ஏழு எட்டு பேருக்கு சாமி வந்துவிடும்..அந்த அளவுக்கு வில்லிசை சக்தியும் ஊர்ப்பெண்களின் தெய்வப் பக்தியும் அத்தகையானது..

வாலிபக் கூட்டம் பத்து பத்து பேராக நின்று கொண்டு வழக்கமாக செய்யக் கூடிய வேலையில் கச்சிதமாக இறங்கிருக்கும்..அப்படியென்ன வாலிபக் கூட்டம் என்னதான் பன்னுவாங்க..?

வில்லிசையை பார்க்கிற சந்தடி சாக்குல அத்தை மகள்,மாமேன் மகளை சைட் அடிக்க

நான் பார்த்ததிலே
அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல
அழகி என்பேன்

நான் கேட்டதிலே
அவள் வார்த்தையைத்
தான் ஒரு கவிதை என்பேன்
ஒரு கவிதை என்பேன்

நான் பார்த்ததிலே
அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல
அழகி என்பேன்

எந்தக் கலைஞனும்
அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப்
பாட்டில் வைப்பான்

பாடல் கனவில் வர
கனவுல மிதப்பாங்க..

காதலி இல்லாத வெட்டி பையகா வில்லுப்பாட்டு படிக்கிற போது கதைக்கு ஏற்ற இடங்களில் சில சினிமா பாடல்களையும் படிப்பதுண்டு...

கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா

வில்லுப்பாட்டு படிக்க வந்த பெண்ணு கதைக்கு ஏற்றவாறு பாட்டுப் படிக்க எங்க ஊர் வாலிபர்கள் என்னைப் பார்த்துதான் இந்தப் பாட்டு படிச்சாங்கனு அலப்பரைய கூடுக்க மற்றொருவன்..டீ கடையில் மூன்று வடையை தின்னுட்டு ஒரு வடைக்கு காசு கொடுத்துட்டு வந்த திருட்டு நாய் நீ.. உன்னைப் பார்த்து படிச்சாங்களானு கிண்டலும் கேலியுமாக கலகலப்பாக இருப்பார்கள்..

ஊரில் திருவிழாக் காலங்கலில் சிறப்பு டீக்கடை வசதியுன்டு டீ ,முருக்கு,உளுந்த வடை கிடைக்கும..

இரவு 10 மணிக்கு துவங்கும் வில்விசை காலை 5 மணி வரை நடைபெறும்..

தொடரும்...

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (29-Jul-23, 6:10 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 34

மேலே