சடகோபர் அந்தாதி, சிறப்புப் பாயிரம் - கட்டளைக் கலித்துறை
சடகோபர் அந்தாதி
இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சடகோபர் அந்தாதியும் ஒன்றாகும்.
கம்பர் சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார்.
இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்பவள்ளல். இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.
இவரது வேறு நூல்கள் ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம் முதலியவை.
சிறப்புப் பாயிரம்
கட்டளைக் கலித்துறை
தேவில் சிறந்த திருமாற்குத் தக்கதெய் வக்கவிஞன்
பாவில் சிறந்த திருவாய் மொழிபகர் பண்டிதனே
நாவில் சிறந்தநல் மாறற்குத் தக்கநன் நாவலவன்
பூவில் சிறந்துவாழ் வான்கம்ப நாட்டுப் புலமையனே! 1