பெண்
அப்பா தன் மகளை தேவதை என்பார்,
அறிவில் சிறந்தவள் என்பார்,
ஆற்றல் கொண்டவள் என்பார்..
கணவர் தன் மனைவியை குரங்கு என்பார்,
அறிவு இல்லாதவள் என்பார்,
எதுவுமே உன்னால் முடியாது என்பார்...
இரு வேறுபட்ட வாழ்வில் எது தானென அறியாது
ஒரு பெண் குழந்தையின் வாழ்வு முடிந்துவிடுகிறது...