கல்லில் கலைவண்ணம் சொல்லில் கவிவண்ணம்
கல்லில் கலைவண்ணம் காட்டிடும் சிற்பியும்
தொல்காப்பி யன்சொன்ன தொல்யாப் பினில்யாத்து
சொல்லில் கவிவண்ணம் செய்கவியும் பெற்றதிறன்
மெல்லிடைத்தாய் நின்தய வால்
மெல்லிடைத்தாய் ---மெல்லிய நுண்ணிடை மின் அணையாளை
நுண்ணூல் இடையாளை , எங்கள் பெம்மான் இடையாளை
---அபிராமி அந்தாதிச் சொல்லாடல்