ஸ்ரீ விநாயகர் துதி - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருள்எலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்!

எழுதியவர் : (18-Nov-23, 3:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே