நிலமங்கை நீராடும் நற்காவிரியில்

நிலமங்கை நீராடும் நற்கா விரியில்
தலம்கொண் டருளும் பிரகதீசன் சுற்றில்
வலம்வந்து நந்திபின் வந்து வணங்கு
குலமோங்கும் நாளும் தழைத்து

தெய்வீகக் தகவல் குறிப்புகள் :--
============================
சுற்றில் --திருச்சுற்றில்
பிரகதீசன் --பிரகதீசுவரன் தஞ்சை பெரியகோவில் இறைவன்
நந்திபின் --நந்தியின் பின் நின்றே சிவலிங்கத்தை
வணங்க வேண்டும் என்பது சிவ வழிபாட்டு முறை

எழுதியவர் : கவின் சாரலன் (24-Nov-23, 8:16 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே