மலர்விழி என்று உன்னை அழைத்தால்
மலர்விழி என்று உன்னை அழைத்தால்
--------முல்லையா ரோஜாவா யாரென்று என்னைக் கேட்குது
புலர்காலைப் பொழுதென்று உன்னை அழைத்தால்
-------மாலை என்னிடம் முகம் சுளிக்குது
சிலைமேனி என்று உன்னைச் சொன்னால்
------கருங்கல்லும் வெண்பளிங்கும் போர்க்கொடி தூக்குது
கலைந்தாடும் கூந்தல் கங்கையோ காவிரியோ நான் சொல்லமாட்டேன்
-------எல்லாவற்றையும் உன் தேர்வுக்கே விட்டுவிட்டேன்
------இயல்பு வரிகள்
மலர்விழி முல்லையா ரோஜாவா சொல்லிடு -- நீயே
புலர்காலை யாமாலை யாநீயார் சொல்வாய் --நீயே
சிலைமேனி பளிங்கா கல்லா சொல்வாய் --நீயே
கலைந்தாடும் குழல்கங்கை காவிரி எதுசொல் -- நீயே
------வெளிவிருத்தம்
மலர்விழி முல்லையா ரோஜாவா சொல்வாய்
புலர்காலை யாமாலை யாநீயார் சொல்வாய்
சிலைமேனி கல்லா பளிங்காநீ சொல்வாய்
கலையும் குழல்நீயே சொல்
-----இன்னிசை வெண்பா