பாவையே பார்த்திடுவாய்

நீல வானம் தோற்றது
உன் நீல விழிகளில்
நிலவும் தோற்றது
உன் விழி ஒளியில்
மலரும் தோற்றதடி
மங்கையே உன்
மந்தகாசப் புன்னகையில்
நான் தோற்றுவிடக் கூடாது
உன் காதலில்
ஆதலினால்
காதலினால்
ஒரு முறை
பாவையே
பார்த்திடுவாய்
----கவின் சாரலன்