அய்யனின் தரிசனம்
அய்யனின் தரிசனம்
அய்யனைக் காண்போம் அருளினை பெறுவோம்
ஆசைகளை களைவோம் ஆறுதலை பெறுவோம்
இருமுடி எடுப்போம் மனவிருளை போக்குவோம்
ஈசன் மகனை தொழுவோம் ஈடுபாடுகளை வெல்வோம்
உள்ளிருக்கும் இறையை கண்டு இனிமையை அறிவோம்
ஊழ்வினைகளை வென்று உன்னத நிலை அடைவோம்
எண்ணங்களில் அவனை நிறுத்தி கள்ளங்களை களைவோம்
ஏக்கங்களை அவனிடம் கூறி கருணையை கேட்போம்
ஐயப்பா சரணம் என கூவி அழைத்து இன்னல்களை போக்கி
ஒருநாளும் உன்னை மறவாமை வேண்டும் என தொழுது
ஓதிடும் மந்திரங்களில் அவனை மனதிருத்தி மலையேறி
ஐயப்பனை ஜோதியாக கண்டு ஆனந்தம் அடைவோம்