குலோத்துங்க சோழன் கோவை - நூல் - இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.

அஃதாவது-தெய்வத்தானாவது தலைவியானாவது கூடுதல்; அவற்றுளிது தலைவியாற் கூடுதலென்க.

அது: வேட்கையுணர்த்தல், மறுத்தல், உடன்படல், கூட்டமென நான்கு வகைப்படும்;

அந்நான்கும்- இரந்த பின்னிற்றற் கெண்ணல் முதலிய பதினைந்தும் பிறவுமாகிய விரிகளையுடையன; அவை வருமாறு

முன்னிலை யாக்கல்.

மெய்தொட்டுப் பயிறல்.

பொய் பாராட்டல் (9, 10)

இடம்பெற்றுத் தழால்.

வழிபாடு மறுத்தல்.

இடையூறு கிளத்தல்.

நீடுநினைந் திரங்கல்.

மறுத்தெதிர் கோடல் (15, 16)

வறிது நகைதோன்றல்.

முறுவற் குறிப்புணர்தல்.

முயங்குதல் உறுத்தல்.(19, 20)

புணர்ச்சியின் மகிழ்தல்.

(இ-ள்) தலைவன் தலைவியைக் கலத்தலான் மகிழ்தல்.

கட்டளைக் கலித்துறை

தேனென்றும் பாலென்றுந் தேமாங் கனியென்றுந் தீங்கரும்பு
தானென்றுஞ் சொல்வது நாமட்டன் றோவத் தயரதன்பாற்
கானென்ற வாசம் பெறுமால் குலோத்துங்கன் காவிரிவாய்
மீனென்ற கண்ணி யிதழ்த்தேன்றித் தித்ததென் மெய்யெ(ங்)குமே! 21

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (22-Jan-24, 3:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 50

மேலே