காணாதிருப்பான் கண்ணன் பக்தியால் காண கிடைப்பான்

எங்குள்ளான் உங்கண்ணன் என்கிறாய் என்சொல்வேன்
எங்கும் நிறைந்துள்ளான் கண்ணனென் பன்னான்
தயிரினுள் வெண்ணையைப் போலவே காணாமல்
ஆனால் கடைந்திட மேல்வரும் வெண்ணைப்போல்
பக்தியால் உள்ளத்தை நாம்கடைய தோன்றுவான்
வெண்ணைப்போல் நம்முன்னே மால்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (12-Mar-24, 4:24 pm)
பார்வை : 45

மேலே