சில நிமிட சலனம்

சில நிமிட சலனம்.

கவிதையால் அவளை
சிறை பிடிக்க நினைத்தேன்
முடியவில்லை
புரிந்தது எனக்கு
நான் கவிஞன் இல்லை

ஓவியத்தில் அவளை
சிறை பிடிக்க நினைத்தேன்
அதுவும் முடியவில்லை
இதுவும் புரிந்தது எனக்கு
நான் ஓவியன் இல்லை

கடிதத்தால் அவளை
சிறை பிடிக்க நினைத்தேன்
முடியவில்லை
புரிந்தது என் நிலமை
படிப்பறிவில்லாதவன்.

பிறந்தால் மாடி வீட்டில்
பிறக்கணும்...... இல்லையேல்
காதலை மறந்து வாழணும்

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

** இளம் கூலி ஒருவன் அழகிய
இளம் பெண்ணை பார்க்கிறான்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (12-Mar-24, 4:46 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : sila nimita salanam
பார்வை : 76

மேலே