சீறாப்புராணம் - விருத்தங்களில் முதல்சீர்
முதற்பாகம்
விலாதத்துக் காண்டம்
காப்பு
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
திருவுருவா யுணருருவா யறிவினொடு
..தெளிவிடத்துஞ் சிந்தி யாத
அருவுருவா யுருவுருவா யகம்புறமுந்
..தன்னியலா வடங்கா வின்பத்
தொருவுருவா யின்மையினி லுண்மையினைத்
..தோற்றுவிக்கு மொளியா யாவு
மருவுருவாய் வளர்காவன் முதலவனைப்
..பணிந்துள்ளி வாழ்த்து வாமே!
குறிப்பு:
இப்பாடலில் அமைந்துள்ள முதல்சீரைப் பாருங்கள்.
நான்கடிகளிலும் கருவிளங்காய் முதல் சீராய் வருகிறது.
இன்று விருத்தங்கள் எழுதும் பலர் எதுகை அமைந்தால் போதுமென்று,
தேமாங்காய், கூவிளங்காய் என்றும்,
புளிமாங்காய், கருவிளங்காய் என்றும் கலந்து கட்டி எழுதித் திறமையைக் காட்டுகிறார்கள்; என்னென்பேன்?

