விருச்சிகராசியில் ஈஸ்வரன் கிபி 2001 பாகம் 8

விருச்சிகராசியில் ஈஸ்வரன் கிபி 2001 :பாகம் 8
+++++++++++++++++++++++++++
கைப்பேசி இல்லா இன்பக்காலம்
கையெழுத்து கடிதாசி உலவியக் காலம்
காதல் கடுதாசிக் கற்கண்டு இனிப்பாச்சு
கடைசி வர காதலுக்கு உயிர்ப்பாச்சு

கைப்பேசிக் காதல் இரு நாளிலே
கை நழுவியேப் போயாச்சு
கணினிக் கால இணையவழிக் காதல்
கற்பைத் திங்கும் கழகுகளுக்கு சாதகமாச்சு

கையிருப்புக் குறைந்து விட்டால்
கைப்பிடிக்கும் காதலன் மாறுதாலச்சு
காதல் நாடகம் கெளரவக் கொலையாச்சு
கலப்புக் காதலும் கழுத்தறுபடும் நிலையாச்சு

இக்காலம் போல் அக்காலமே
ஈனப் பிறவிகள் கிராமத்திலே பிறந்தாச்சு
காதலியை மிஞ்சிடும் வாரம் இரு கடிதம்
கட்டியவள் தீட்டிடும் காவிய மடல்..

அன்பே யென்பாள் நலமாயென்பாள்
பண்பே யென்பாள் பாசமே யென்பாள்
காணது கண்ணும் கருவேல் முள்ளென்பால்-உன்னிடம்
பேசாது வாயும் பொசுங்கிய மலர் யென்பாள்

ஆயிரம் முத்தங்கள் தருவாக
ஆயிரம் முறை எழுதியவாள்-உன்னை
அணைக்காத கைகள்
அணலிடும் மரக்கட்டை யென்றாள்

நினையாத நாள் அம்மாவாசை நிலவென்பாள்
எண்ணாத பொழுதுகள் எண்ணிக்கையில் குறைவென்பாள்

இத்தனையும் எழதிய என்னவள்
இத்தனையும் எழுதிய என்னவள்
உள்ளம் மட்டும் உனக்கில்லை
சித்தி மகன் சோலைக்கென்றாள்...

சீர்கெட்ட இப்பிறவியும் பூமியில்
சீரும் சிறப்பாக வாழ்கிறது என்றாள்
சீரானப் பாண்பாடு கொண்ட
தமிழ்நாட்டின் தலைவிதி இதுதானா..?..

ஈஸ்வரனின் விளையாட்டுத் தொடரும்...

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (13-Apr-24, 5:01 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 16

மேலே