உசிரே என்னை நீங்காதடி
உசிரே என்னை நீங்காதடி
👫👫👫👫👫👫👫👫👫👫
ஏழையெனை நோக்கி
ஏறெடுத்தப் பார்வையில்/
மழைத்துளி விழுந்த
மணலாகப் புதுப்பொலிவானனே/
கரைசேராக் கடலலையாக
கனவில் வருபவளே/
கரைகின்ற நிலவாக
கலையிழந்தேன் நினைவாலே/
வலையிட்ட மீனாக
நிலையற்று மயங்கி/
ஆலையிட்ட கரும்பாக
பாலை நிலமாகியே/
கடிகார முள்ளாக
கடக்காது நிற்கிறேன்/
கடத்தும் மின்கலமாக
கன்னியே என்னிடமேவா/
சூழ்நிலை மாறினும்
சூரியனை சுற்றமறவா/
பூமியாக உசிரே
என்னை நீங்காதடி/
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்