கருப்பு நிறத்தழகி

அம்மன் கோயில் விழாவுக்கு மாநிற/
அழகு கன்னிகள் பலர் வந்திருக்க /
கருமேகப் பேரழகியே உன்னை கண்டேன்/
கதிரவனைக் கண்ட தாமரையாக மலர்ந்தேன் /

கருவாச்சி என் இதயத்தில் குடியேறியாச்சி /
கண்ணுக்குள் காதல் சடுகுடு விளையாடி /
கண்ண விட்டுப் போக மறுக்கிறாறேய /
கலியாணமும் செய்துக் கொள்ள தயங்குகிறாயே /

வாழ்க்கை வாழ்வதற்கு நிறம் தடையில்லை /
வாழலாம் இன்பமாக வெள்ளை மனதுடன்/

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (20-Apr-24, 1:37 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 53

மேலே