குலோத்துங்க சோழன் கோவை - நூல் - எட்டாவது - பாங்கிற் கூட்டம் - பாடல் 49

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-

தலைவன் பாங்கனைச் சார்தல்.

பாங்கன் தலைவனை யுற்றது வினாவல்

தலைவ னுற்ற துரைத்தல்.

கற்றறி பாங்கன் கழறல்.

கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்.

பாங்கன் கிழவோற் பழித்தல்.

கிழவோன் வேட்கை தாங்கற்கருமை சாற்றல்.

(இ-ள்) தலைவன் பாங்கனைநோக்கி நீ பழிக்கின்ற என்னுள்ளந் தேறுதற்கு வேட்கை யென்னாற் றாங்கமுடியாதென்று கூறுதல்.

இதுவுமது.

கட்டளைக் கலித்துறை

இந்நா ளொருத்தி தருகாமத் தீநண்ப யாரவிப்பார்
பொன்னாருஞ் செல்வப் புகார்மன் குலோத்துங்கன் புண்ணியமாந்
தொன்னாண் மரபிற் றொடுங்கடற் கேனுமத் தொன்மரபோர்க்
கந்நாள் வருவித்த வானதிக் கேனு மவிக்கரிதே! 49

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (30-May-24, 5:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கவிதைகள்

மேலே