கண்சுழற்சியால் என் காதல் பூமியை சுழலவிட்டு வேடிக்கை பார்க்கிறாய்

கண்ணிமை மூடித் திறந்து கவிதை
புத்தகம் ஆகிறாய்
கண்ணசைவால் கயலுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கும்
நீச்சல் கோச்சாகிறாய்
கண்சுழற்சியால் என் காதல் பூமியை ஓரச்சில்
சுழலவிட்டு வேடிக்கை பார்க்கிறாய்
கண்ணிமை பாதி மூடி பாதி திறந்து நாளை பொழுதை
பொன்னந்தி மாலை ஆக்குகிறாய்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Aug-24, 8:05 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே