"அதிசய குழந்தை"

என்ன குழந்தை பிறந்திருக்கிறது?

எப்போது பிறந்தது?

யாரைப்போல் இருக்கிறது?

குழந்தை எத்தனையாவது
மாதம் வயிற்றில் உதைத்தான்
என உறவினரின் கேள்விக்கு

உறைந்துபோய் நின்றாள்
உயிர் கொடுத்தத் தாய்.....
காலில்லா குழந்தையை (HANDICAPPED CHILD)
கையிலேந்திக்கொண்டு....

நிலவுபோல் பிள்ளை வேண்டுமென்றாள்
பிறைநிலவாக பிள்ளை பிறக்கும் என்றறியாமல்....

ஆறுதல் சொல்லுங்கள்...

கை இல்லை கால் இல்லை,
இவன் வாயால் வண்ணம் தீட்டும் வல்லவன்,
எதிர்ப்பார்ப்புகள் ஏதுமில்லா நல்லவன்,

முயற்சி செய்பவர்களுக்கு மூத்தவன்,
மலடி எனும் பெயர் வந்து தீண்டிடாமல்
தன் தாயின் மானத்தை காத்தவன்....

உன் அன்பை முழுமையாக அனுபவிக்க
ஆண்டவன் பேச்சை கேட்காமல்
அவனை எதிர்த்து அவசரமாய் வந்த
அதிசய குழந்தை அவனென்று.....

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (19-Oct-11, 7:28 pm)
பார்வை : 410

மேலே