பொங்கல் நாளிதே புன்னகை பூத்திடும் பொன்னாள் - கலித்துறை
கலித்துறை
(மா கூவிளம் விளம் விளம் மா)
பொங்கல் நாளிதே புன்னகை பூத்திடும் பொன்னாள்;
திங்கள் போலவே தென்றலின் காற்றதன் மென்மை!
செங்கண் காண்கவே அரிசியைப் பானையி லிட்டுத்
திங்கள் போலவே தேசுடன் பொங்கிய சோறே!
- வ.க.கன்னியப்பன்