பிரிந்தும் பிரியாமலும்

நீ இன்னும்
என்னுடன் தான் இருக்கிறாய்!

என் கணினியின்
கடவுச் சொல்லாகவும்..

என் பிள்ளைக்கு
நான் சொல்லும்
கற்பனைக்கதையின்
கதாநாயகியாகவும்..

என் மனைவிக்கு
தெரியாமல் நான்
மறைத்து வைத்திருக்கும்
உன் புகைப்படத்திலும்..

உன் பெயரை யாராவது கூப்பிட
கேட்கும்போதும்..
உன் சாயலில் யாரையாவது
பார்க்கும்போதும்..

உனக்காக நான்
எழுதிய கவிதைகளிலும்...

தூக்கம் தொலைத்த
பின்னிரவுகளில்
உன் நினைவில்
நான் சிந்திய
கண்ணீர் துளிகளிலும்...

எழுதியவர் : சுரேந்தர் கண்ணன் (18-Apr-25, 7:06 pm)
சேர்த்தது : சுரேந்தர் கண்ணன்
பார்வை : 59

மேலே