கேட்காமலே
கேட்காமலே !
சின்ன குழந்தை
கேட்க கேள்விக்கு
பதிலளிக்க தயங்கும்
தாய் தந்தைக்கு
கிட்டிய பரிசு
யாதெனில்
காலம் தாழ்த்தி
மரியாதை நிமித்தம்
போதனை புகுட்ட
அவர்களிடமே விட்டு விட்டது …..
காலம் பதில் சொல்லும்
ஒரு புறம் சிந்திக்க
மறு புறம்
உண்மையை போட்டுடைக்க
என்ன கேள்வி என வினவ
குழந்தை மறைக்கவில்லை !
இப்போ மீண்டும் சொல்ல….
ஏன் என்னை இங்கே யார்
கொண்டுவந்தது…
என்னை கேட்காமலேயே ….
பாவ புண்ணியம் இல்லையா ?
அடுத்த முறை
நன்றாக சிந்தித்து
செயலில் இறங்கவும்
இரக்க குணம்
துணை கொண்டு !
என் போன்றோர்
பிறந்து இறந்து
மீண்டும் கேள்வி கேட்க !
இதனை முதலில்
கவனியுங்கள்
முன்னேறி தெய்வங்களே !