காட்டிக் கூட்டாதே
நீ குளித்து முடித்த நீர் ஏன்
இந்த ஓட்டம் ஓடுகிறது?
உன்மேல் பட்ட குதூகலத்தாலா?
உன்மேல் இருக்கும் நாற்றத்தாலா?
நீ தொட்ட செல்ல போன் ஏன்
இந்த சிணுங்கு சிணுங்குகிறது?
உன் கை பட்ட வெட்கத்தாலா?
உன் கையில் இருக்கும் அழுக்கினாலா?
நீ தலை வாரின சீப்பு ஏன்
இந்த சிரிப்பு சிரிக்கின்றது?
உன் தலை கோதின இருமாப்பிநாலா?
உன் தலை வழுக்கையில் சறுக்கியதாலா?