அன்னையே...
கவி வரிகளில் கருவாயிற்ற,
உன் உறவு,
பேனா முனைகளில் சாகசம் செய்த,
உன் நினைவுகள்,
புன்னகைக்குப் பின்னால் நின்ற,
உன் பேச்சு..,
திறமைகளைப் புறக்கண்ட,
உன் பார்வை,
வெற்றிப் பாதையில் ஏணி வைத்த,
உன் ஊக்கங்கள்,
விழுந்தபோது தூக்கிவிட்ட,
உன் ஆறுதல்கள்,
மறந்துவிடவே முடியாது என்றும்,
உன் வதனம்...
மறைந்து போயினும் இன்றும் வேண்டும்,
உன் தரிசனம்....
என்னைப் பெற்றெடுத்து விட்டுச் சென்ற,
என் அன்னையே...