தாய்ப்பால் போதாது!

துடிக்காத இதயத்தால்
மாந்தர்க்கு உயிரில்லை...
படிக்காத மனிதர்க்கு
பாரினில் உயர்வில்லை!!

படிக்கின்ற காரணத்தால் - கவிதை
வடிக்கின்ற வரம் தந்தால்
தமிழன்னை!!

விழி வரையில்
மொழிக் கரையில்
திரையிட்ட ஓவியம்
புரியாத காவியம்

எழுத்தறியாத ஒருவர்
இயல்பறியா மனிதர்
மொழிமுடம் உள்ளார்!

மனிதா நீ...
முற்றிலும் கற்காமல்
முழுமைபெறப் போவதில்லை

எழு!
எழுத்துக்களோடு பழகு!
விழுதுகள் விட்டு
வேர்களை கவனி...

எழுத்து...
துரிதவேக தமிழ் வாகனம்...
மொழி பகரும் மோகனம்!
கவிதை கானகம்!
காவிய தேனகம்!

உடல் அழகு போதாது
உள்ளம் உணர வேண்டும்...

தாய்ப்பால் போதாது
தமிழ்ப்பாலும் வேண்டும்!!

எழுதியவர் : கி. சுரேஷ் குமார் (23-Nov-11, 2:37 am)
பார்வை : 306

மேலே