எங்ஙனம் உன்னை மறக்க..!
நியாபகத்தின் உச்ச கட்ட தாவலாய்
உன் முகமே வந்து போக..
முழுங்க முடியாமலும் வெளி எடுக்க இயலாமலும் மீன் முள்ளாய் உள்ளம் குத்த..
கிடைத்த இடங்களிலெல்லாம்
உந்தன் பெயர் எழுதிவிட கரம் துடிக்க..
மறந்துவிட்டதாய் சொல்லியே
ஓராயிரம் முறை உன்னை
நியாபகப்படுத்திக்கொண்டிருக்க..
இந்நிலையில் எங்ஙனம் உன்னை மறக்க..