கடைசியாய்...

இவை கவிதைகள் அல்ல!!!
என் கண்ணீர் துளிகள்.
மடிந்து போன ஒ௫ உறவுக்காக
நான் மனதால் செலுத்திய
மலர் வளையங்கள் !!!

*
நினைவுகள்
ஓவ்வொன்றும்
சிறு தீப்பொறியாய்
என் மனசே
ஒரு எரிமலையாய்
ஏன் இறந்தாய்???

*
நீ
இறந்து போனதை..
மௌனமாய் உறங்கியதை..
கண் கூடாய்
பார்க்காதவரை

உறவே!
நீ உயிருடன் தான்
இருக்கிறாய்
என் உணர்வுகளுக்குள்..

*
உன் இழப்பிற்குப்ப்பின்
குழந்தைகள் விளையாடும்
விளையாட்டு வாகனங்களின்
பொய்யான விபத்துகளைக்கூட
ஜீரணிக்க முடியவில்லை
என் மனதால்..

*
இறந்தவன்
அமைதியாய்
உறங்குகிறான்

இருக்கிறவர்கள்
கதறி கதறி
அழுகிறார்கள்

அந்த சத்தத்திலாவது
அவன்
விழிக்க மாட்டானா???

எழுதியவர் : (21-Dec-11, 6:46 pm)
Tanglish : kataisiyaai
பார்வை : 244

மேலே