இது தான் உண்மையான காதலா
உன்னை பற்றி நினைக்க மாட்டேன் என்பேன்....
ஆனால், என் மனம் உன்னை நினைக்காமல் இருந்தது இல்லை
உன்னை பார்க்க கூடாது என்று நினைப்பேன்.....
ஆனால், என் கண்கள் உன்னை பார்க்க வேண்டும் என்று துடிக்கும்
இனி உன்னை பேசவோ,பார்க்கவோ மாட்டேன் என்று உரைப்பேன்....
ஆனால், அப்படி உன்னை வெறுத்து பேசும் நேரங்களில்
ஏன் என் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது என்று தெரியவில்லை....
இதுதான் உண்மையான காதலா....
ஆனால், அந்த காதல் அவனிடம் துளி கூட இல்லை என்னும் போது தான் மனம் வலிக்கிறது......