பிரிவதேது உன்னை.....

நீ உதிர்த்த
புன்னகைப் பூக்கள்
இன்றும் இருக்கின்றன
என் வீதிகளில்...வாடாமல்....

நீ பார்த்த
பார்வை மேகங்கள்
ஏமாற்றவில்லை...
மழை பொலிந்த படியே
தான் இருக்கின்றன...
என் விழிகளில்

நீ பிரிந்ததாய் சொல்கிறார்கள்
நண்பர்கள்....
அவர்களுக்கு எப்படி சொல்ல
"உன்னை பிரிவதென்பதேது ?
உன் நினைவுகள்
என்னோடு இருக்கும் போது"-என்று

எழுதியவர் : (9-Jan-12, 10:24 pm)
பார்வை : 246

மேலே