உழவர் உலகம்!!!
உச்சி வெயிலை முகர்ந்து - தினம்
வியர்வை வழிந்தோட;
சுட்டுவிடும்வெயிலிலும்,
சுண்ட கஞ்சியை குடித்து;
வெறும் நிலங்களை எல்லாம்,
விளை நிலங்களாக மாற்றும்
நம் உழவர்களை;
சோற்றில் கை வைக்கும்
போதெல்லாம் - நமக்காக;
சேற்றில் புதைந்து போகும்
அவர் வாழ்வை,
இன்றேனும் நினைத்து,
காலை வரும் கதிரவனே!
உன்னை கை கூப்பி வனங்குகிறோம்!!!
உன்னை தொட்டு
வணங்க முடியவில்லை - என்று
எட்டி நின்று தொழுகிறோம்...
எங்கள் மண்ணை காப்பாத்து!!!என்று
மங்கலமாய் மஞ்சளும்,
மணிமணியாய் நெல்மணியும்,
அணிவகுக்கும் காய்கறிகளும்,
ஆடிவரும் தோரணமும்;
தித்திக்கும் கரும்புடனும்,
திகட்டாத வாழ்வுடனும்,
புத்தாடை உடுத்தி,
புது உலகாய் - எங்கள்
உழவர் உலகம் வாழ,
பொங்கலோ! பொங்கல்!!!