சிரிப்பையும் விற்றிருபாலோ???
பொழுதுபோன மாலையிலே,
பொழுதுபோக்க என்னுடனே...
வந்துசென்ற மலர்க்கொடியே,
இல்லை
நீயே முட்கொடியே...
தென்றலென உன்னை நினைத்தேன்,
புயலைப்போல் எனைபுரட்டி..
தூக்கிபோட்டு சென்றாயே,
சாட்சி ஏதும் இல்லாமலே....
தோழியாய் என்னிடம் நட்பை விற்றாய்,
காதலியாய் வந்து காதலை விற்றாய்...
கடவுளுக்கு நன்றி...
சிரிப்புக்கு விலையில்லை,
இருந்திருந்தால்,
அதையும் விற்றிருப்பாய்...