கடவுள் வாழ்த்து

அன்பென்னும் ஆகாயத்தில் அடங்கி நிற்பவனும் நீயே

ஆகாயத்தினும் விரிந்து மேலோங்கி நிற்பவனும் நீயே

இசையுடன் சிறுபூவை பரிசாய் ஏற்பவனும் நீயே

ஈகையுடன் உதவுபவனை பக்தனாய் ஏற்பவனும் நீயே

உண்மையுடன் உழைக்கும் உள்ளத்தில் இருப்பவனும் நீயே

ஊனுடன் உணவுண்ணும் கள்ளத்தில் இருப்பவனும் நீயே

எளிதாக ஏழே நொடிகளில் கிடைப்பவனும் நீயே

ஏழேழு பிறவிகள் காத்திருந்து கிடைக்காதவனும் நீயே

ஐயமின்றி அனைத்துயிர்களின் உருவமாய் இருப்பவனும் நீயே

ஒளியுற்ற பகற்பொழுதிலும் உருவமற்று இருப்பவனும் நீயே

ஓதும் மந்திரங்களில் உயிராய் இருப்பவனும் நீயே

ஔவைமுதல் அடியேன் வரை அனைவராலும் புகழப்படுவதும் நீயே....

-கலைசொல்லன்

எழுதியவர் : (28-Jan-12, 11:19 pm)
பார்வை : 3740

மேலே