வெட்கமே நீ !!!!!!!!!!!

என்னவன் வரும்போது எனை
வந்து கொல்கிறாய் ஏன்?

என்னவன் நெருங்கி வரட்டும்
விலகி போ வெட்கமே நீ !

காதலன் காதல் கொள்ளட்டும்
கலைந்து போ வெட்கமே நீ !

தென்னவன் கன்னம் சீண்டட்டும்
தொலைந்து போ வெட்கமே நீ !

மன்னவன் முத்தம் கொடுக்கட்டும்
மயங்கி போ வெட்கமே நீ !

என்னவன் வரும்போது எனை
வந்து கொல்கிறாய் ஏன் ?

கண்ணாளன் காது கிள்ளட்டும்
எனை கிள்ளாதே வெட்கமே நீ !

இனியவன் இதழ் தொடட்டும்
இறங்கி போ வெட்கமே நீ !

முறையானவன் முகம் பார்க்கட்டும்
மூழ்கி போ வெட்கமே நீ !

என்னவன் வரும்போது எனை
வந்து கொல்கிறாய் ஏன் ?

எழுதியவர் : ப்ரியாராம் (8-Feb-12, 10:08 am)
பார்வை : 264

மேலே