உச்சிதனை முகர்ந்தால்......

சந்தோசத்துக்கு கூட அவர்களால்
கை தட்ட முடியவில்லை
அழுகைக்கு கூட நம்மால்
எப்படி கை தட்ட முடிகிறது......
முத்துகுமாரும் செங்கொடியும்
இறந்தால்
தான் நாம் தமிழர்
என்பதை நினைப்போம்
என்றால் நாளை
நானும் அந்த முடிவை எடுக்க நேரிடலாம்..... மனித சங்கிலி ஊர்வலங்களும்
மெழுகுவர்த்தி வெளிச்சங்களும்
செய்தி தாள்களை வேண்டுமானால் அலங்கரிக்கலாம்......
அவை ஈழத்தில் ஒரு பூ பூக்க கூட உதவாது.... எத்தனை உறவுகள் நம்மை
தமிழன் என நியாபக படுத்தும்.....
நினைவுபடுத்தும் அளவிற்கு நாம்
தமிழர்களாய்!!! இருக்கிறோம்!
மரங்களை சாய்ப்பதர்க்கும்
உயிர்களை அளிப்பதற்கும்
பெயர் தானே என்றால்....
மூன்று லட்சம் பேர்
இறந்ததை வேடிக்கை பார்த்த
நமக்கு என்ன பெயர் வைப்பது......? இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த
கிடைத்த தருணமாய் நினைத்து
உச்சிதனை முகர்ந்தால் பாருங்கள்......
இல்லை உங்கள் மொழியில்
இதுவும் "மொக்கை" என்றால் இங்கிருந்து இப்படியே நகர்ந்து விடுங்கள்......

எழுதியவர் : ஜார்ஜ்.a (9-Feb-12, 2:44 pm)
பார்வை : 268

மேலே