மூன்று எழுத்தாய்

மூன்று எழுத்தாய் வாழ்வின்
மூலாதார முடிச்சுகள் சூழ்வு.
மூக்கு வழி உயிர்
முறுவலித்து முகவரி எழுதும்.
மூதுரை படிக்கக் கல்வி.
மூடமின்றி வாழ அறிவு.
மூவாசை பெருக்கும் நெறிகள்,
மூன்றில் அனைத்தும் அடக்கம்.

பாசம், பரிவு, அன்பு
பாதமிடும் வழி அன்னை.
பண்பு, அறிவு தூண்டும்
பாலாடையன்ன கவசம் தந்தை.
பாதாளம்வரை பாயும் பணம்.
பாயுமொளியென மூன்றில் பதவி.
பாதாதிகேசம் சுகம் தரும்
பாட்டும் மூன்று எழுத்தில்.

அருள் விலக்கி வெடிக்கும்

அமைதி அழிக்கும் குண்டு,
இனம் புரியாப் பயம்,
இருள் வழித் திகில்,
இவைகளோடு மனம், மரம்,
தனம், சக்தி, சிவம்,
வானம், காட்சி, காலம்,
கனவு அனைத்தும் மூன்றில்.



பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-8-2006.

எழுதியவர் : வேதா. இலங்காதிலகம் (9-Feb-12, 11:30 pm)
பார்வை : 230

மேலே