[79] உழைப்பின் உயர்வு..! (குறட்பா வகை)

உண்டால் அம்ம! உலகம், உழைப்பவர்
கொண்டாடு மட்டும் குறித்து.

ஆளும் அரசுக்கும் ஆணி உழைப்பவர்!
வீழும் அவரின்றி வேந்து.

சூழும் நலன்களே சொல்லாவோ? வாழும்
உழைப்பே உயர்வுக்கு அழைப்பு!

அம்ம ! அரிவை முயக்கினும் நன்றுகாண்,
நம்மை உயர்த்தும் உழைப்பு!

பாடுற்றார் உண்டு பலரே, உழைப்பினால்
கேடுற்றார் உண்டோசொல் கேட்டு.!

அன்பும் அறனும் அமைந்தோர்க்கே நல்லுழைப்பின்
இன்பும் பயனும் இயல்பு!

உழைப்பெனும் ஊட்டினால் *ஓரைந்தும் காப்பான்
அழைப்பிலா வானோர் விருந்து!
[* ஓரைந்தும்- தன்குடும்பம்; தன்தொழிலகம்;
சமூகம்; நாடு; தான் -என்ற ஐந்து ]

உழைப்பே உயர்வுக்கு அழைப்பாம், உணர்ந்து
களிப்போம் களைப்பைக் களைந்து!

கோளில் உழைப்பைக் கொடுப்பவர் தாளினை
நாளும் வணங்குவோம் நாம்!

-௦-

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (17-Feb-12, 8:55 pm)
பார்வை : 717

மேலே