சொல்லாத கருத்தல்ல .3

நமது
கல்வி,பொது
வாழ்கையில்
கற்றதை, கற்பிக்கத்தான்
வாழ்க்கை !

நாமே
குழிதோண்டி
புதைத்து மீண்டும்
வளர, அது
வாழை கன்றோ
தென்னங் கன்றோ
அல்ல !

ஆசானை மதியுங்கள்
தாய்தந்தை மதியுங்கள்

மனசுக்கு
பிடித்தவரிடம்
மனம் விட்டு
பேசும் போதுதான்
மரணம் கூட
மறந்து போகும்.

கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை
என்று கூறுவது
எளிது, . போராடுங்கள் !
வெற்றி பெறுங்கள்
என்றுதான் கூறுகிறேன் .

ஆசிரியரை கொன்ற
மாணவன் . மாணவியை
கற்பழித்த , ஆசிரியர் ,
காதலிக்க மறுத்த
கல்லூரி மாணவியை
கொன்ற மாணவன் !

உலகம்
எங்கே செல்கிறது ?

என்றும் அன்புடன்
இன்று மன "வருத்தத்துடன்"

எழுதியவர் : சேதுராமலிங்கம்.u (20-Feb-12, 10:17 am)
பார்வை : 299

மேலே