மலர்கொடி

அம்மா அப்பாவிடம்
சொன்னாள்............

மலர்கொடி பூத்து விட்டது என்று ............

தலை கோதிவிட்டாள் அம்மா .........

எல்லை இல்லா சந்தோசம்
எல்லோருக்கும்.............

பச்சிளகீற்றால் வேலி போட்டார்கள்
மலரை யாரும் பார்க்ககூடாது என்று .............

இளசுகளின் கண்கள் வேலியை மேய்ந்தது..........

ஓளிகீற்றுகள் அனுமதி இன்றி
உள்ளே நுழைந்தது ............

எல்லை இல்லா சந்தோசம்
எல்லோருக்கும்.............

அனைவருக்கும் சொல்லி
அனுப்பினார்கள்
வேலிக்குள் தண்ணீர் ஊற்ற........

அனைவரும் வந்தனர்
பூத்த மலரை புதுப்பிக்க..........

தாய்வீட்டு சீரோடு
தாய்மாமன் பரிசம் போட்டன் ..........

விலை கொடுத்து மலரை வாங்க
யாருக்கும் மனமில்லை ...........

தாய்மாமன் மலரை இலவசமாக
கேட்டான் .............

தந்தையும் தலை அசைத்து
அனுப்பி வைத்தார் ...........

மணபெண்ணாக என்னை ..........

எனக்கு பிறகு பூக்கும்
முன்று மலரை புதுப்பிக்க
வேண்டும் என்று ..............

எழுதியவர் : கவிஞர் :ஜெ .மகேஷ் (11-Mar-12, 7:07 pm)
சேர்த்தது : jgmagesh
பார்வை : 189

மேலே