அர்த்தனரீஸ்வரர்

ஆண் பாதி பெண் பாதி
ஆண் இன்றி பெண் படைப்பதேது
பெண் இன்றி ஆண் படைப்பேது
ஆணும் பெண்ணும் சமம் - புராணத்தில்
திருநங்கைகள் - இயற்கையின் செயல்
இதை ஏற்க மனித மனம் மறுக்கிறது
உடலிலும் உணர்விலும் சமமகிவிட்டோம்
இந்த சமூகத்தின் பார்வையில் சவமகிவிட்டோம்
வானத்தின் மழைத்துளி பேதம் பார்ப்பதில்லை
ஆனால் மனிதனோ ! பேதம் பார்த்து வெறுத்து பிரிக்கிறான்.
மனிதனை மனிதனாக பார்ப்பதை விட
எல்லா உயிர்களையும் அன்பாய் பாருங்கள்
அரிது !அரிது!! மானிடராய் பிறத்தல் அரிது !!!
மனிதரே ! மனிதர்களை பற்றி கற்று கொள்ளாதீர்கள்
மனித நேயத்தை கற்று கொள்ளுங்கள்
உடலை மீறி உள்ளத்தை காணும்
சமுதாயமாக மாறும்வரை
காத்திருப்போம் - நம்பிக்கையோடு

எழுதியவர் : அழகரசன் (11-Mar-12, 11:09 pm)
பார்வை : 318

மேலே