பதுங்குதல் பாய்வதற்கு அல்ல
நீர்நிலைகள் வற்றித் தவிக்கவிடும்
தாகமிகுதியினால் உருவான விக்கலல்ல.
நீர்மிகுந்து நிலைகுலைந்து
செய்வதறியாது உலாவரும் சிக்கல்.
ஆறு பெருகிடின் அணைதல் முடியுமோ?
ஊறு விளைந்திடின் மனத்திடம் பலக்குமோ?
விந்தையான வேங்கைதான்,
வீரமான அரசகுல மங்கைதான்,
இந்தப் புலி பத்துங்குதற், பாய்தற்கல்ல,
பல்பதித்து சதை கிழிப்பதற்கும் அல்ல,
பதமாகக் கதையுரைத்து ,
பஞ்சணைய மஞ்சம் சேர்ந்து,
கொஞ்சி விளையாடி,
மிஞ்சி நிற்பதற்கு.
அஞ்சமறந்து மடி கிடைத்தற்கு.