ஏன் இன்னும்....
அன்று
நிலவை காட்டி சோறு ஊட்டியவன்
இன்று
நிலவில் நின்று சோறு ஊட்டுகிறான்....
அன்று
செவ்வாயையும் புதனையும்
காலண்டரில் பார்த்தவன்
இன்று
கண்ணருகே பார்க்கிறான் ....
ஆனால்
ஏன் ? இன்னும்
பாட்டி சுட்ட வடையை
காகம் திருடுகிறது
நம்
பள்ளி புத்தகத்தில்......