...உன்னை யாசித்ததால்...
ஏனோ நான் உன்னை சந்தித்தேன்?...
ஏனோ நான் உன்னை நேசித்தேன்?...
ஏனோ நான் உன் நினைவுகளை சிந்தித்தேன்?...
உன் வார்த்தைகளுக்கு ஏனோ நான் செவி சாய்த்தேன்?...
உன்னை ஏனோ நான் ரசித்தேன்?...
மொத்தத்தில்!...
ஏனோ நான் உன்னை சுவாசித்தேன்?...
உன்னை யாசித்ததால்!..
இன்று!..
ஏனோ நான் தனிமையில் தவிக்கிறேன்?...
-ச.ஜெயபாரதி-