உன் கண்ணீரையாவது சிந்திவிட்டு போ!

என்
வாழ்க்கை பக்கங்களுக்கு
பற்றாக்குறை

அதில்
உன் நினைவுகளை
எழுத வேண்டுமென்று நினைத்ததால்.

முதல் பக்கத்தில்
எழுதப் போவதென்னவோ
நான் தான்.

உன்னை
முதன் முதலில்
பார்த்த நாளை
என் மூன்றாம்
பக்கத்தில் எழுதுகிறேன்.

முதல் இரண்டு பக்கங்கள்
நான் கண்ட
கனவுகளில்
வந்த உன்
உருவங்களை பற்றி
எழுதுவதற்க்காக!

என் இறுதி பக்கங்களில்
முடிக்கபடாமலே
போய்விட்டன.

நீ என்னை பிரிந்ததால்
மட்டுமல்ல.

என் உயிரும்
என்னை பிரிந்ததால்.

உன் கண்ணீரையாவது
சிந்திவிட்டு போ....

என்
இறுதி பக்கங்களுக்காக.....

எழுதியவர் : ராஜேஸ்குமார் (2-Apr-12, 5:24 pm)
பார்வை : 607

மேலே