காரணம் தெரியாமலே..

மழையில் நனைந்து காத்திருக்கிறேன்...

விழுகிற ஒவ்வொரு துளியும்
அழுத்திச் செல்கிறது அடிபாதாளம் வரை..
அதெப்படி
இதெல்லாம் எனக்கு மட்டும்..

இருட்டில் கூட அள்ளி பிசைந்து,
உருட்டி உருட்டி விழுங்கச்சொன்ன விரல்கள்,
வெட்ட வெளிச்சத்தில்,
கொட்டிக்கிடக்கும் சோற்றுக் கவளியில்,
விடாமல் தேடிக்கொண்டே இருக்கிறது
விட்டத்தை பார்த்துக்கொண்டு...
அதெப்படி
இதெல்லாம் எனக்கு மட்டும்..

இப்படி இல்லையென்று
அப்படி செய்தேன்..
அதுவும் சரியில்லை என்று,
வேறொன்றும் செய்தேன்.
எதுவும் சரியில்லையென்று
திரும்ப திரும்ப களைத்துக்கொண்டேன்..
"அய்யோ விட்டுடா" என்று
அழுது புலம்புகிறது என் தலைமுடி...
அதெப்படி
இதெல்லாம் எனக்கு மட்டும்..


தினம் இரு குளியல்..
தினம் தினம் பூஜை..
தினம் ஒரு கடவுளிடம் பிரார்த்தனை...
திரும்பவும் நீ என்னை கடந்து போகச்சொல்லி
காத்திருக்கிறேன் - காரணம் தெரியாமலே...

எழுதியவர் : gshyamraj (17-Sep-10, 10:08 am)
சேர்த்தது : shyamraji
பார்வை : 453

மேலே