தொலைந்துவிட்ட கவிதை...
அம்மா...
உலகத் தமிழில் உரைக்கப்பட்ட முதல் கவிதை...
அம்மா...
உன்னோட ஆசைப்படி
உலகமெல்லாம் சுற்றிவந்தேன்..,
அதை என் வீட்டிற்கும் கூட்டி வந்தேன்..!
பஞ்சு மெத்தை பல இருந்தும்
நான் தூங்கி நாளாச்சு...
அம்மா, என்னோட கண்ணுறங்க,
உன்னோட மடியிருக்கா..?
கண்ணு ரெண்டும் எரியுதம்மா...
காது ரெண்டும் அலறுதம்மா...
தவழ்ந்து வரும் காற்றிலேதும்,
உன் தாலாட்டுப் பாட்டிருக்கா..?
நண்பர்கள் பலரிருக்க...
சொந்தங்கள் சிலரிருக்க...
நான் மட்டும் தனிமையிலே..,
ஆலமரத்துக்கு, வேர் மட்டுமில்லாம
விழுதிருந்தும் என்ன பயன்..?
போன வருஷம், நீ தேட நான் கெடச்சேன்...
இந்த வருஷம், நான் தேட நீ..?
நிறம் மாறும் பூமியில-மகன்
நிரந்தரமா இருப்பான்னு
நெனச்சுகிட்டே போயிட்டியா..?
ஆகாயம் சுற்றிப்பார்க்க, அழைப்பொன்னு வந்ததுன்னு..,
அன்பு மகனுக்கு சொல்லாம கெளம்பிட்டியா..?
இதோ, அனுப்புகிறேன் உனக்காய்..,
என் பேனா கசியவிட்ட ஓரிரு வரிகளும்..!
என் கண்கள் கசியவிட்ட கண்ணீர்த் துளிகளும்..!
-ஆனந்தன்.